search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா சட்டசபை தேர்தல்"

    • ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு வருகிற 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    • ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    கர்நாடகா, தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த மாநிலத்தில் இன்னும் 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இப்போது இருந்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை கட்சிகள் நடத்தி வருகின்றன.

    ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணியை அறிவித்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறையும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா? அல்லது தெலுங்கு தேசம் கட்சியுடன் இணையுமா என்பது புதிராக உள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஜனவரி மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சர்மிளா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இந்த முறை ஆந்திராவில் தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக பார்முலாவான பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்தது. அதேபோல ஆந்திராவிலும் வாக்குறுதிகளை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    ஆனாலும் மாநிலத்தைப் பிரித்த காங்கிரசுக்கு ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு குறைவாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க ஆளுங்கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர். இது முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    ×